Happy B-Day..... From Beloved One  

Wednesday, November 3, 2010

AddThis Social Bookmark Button


முதிர்ந்த இலைகள்!!  

Saturday, December 5, 2009

நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!

என்
ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!

தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!

தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!

ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!

இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....

ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!

ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!

ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!

திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!

பிரார்த்தனை
விழிகளின் ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒரு
தாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!

வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!

நில்!!

அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

AddThis Social Bookmark Button


என்னை சுவாசிக்க விடுங்கள்!!!  

என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக் கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.

என்னை
விட்டு விடுங்கள்....

அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.

நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.

நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னைசுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali

AddThis Social Bookmark Button


எல்லாம் முடிந்தது???  


"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?

AddThis Social Bookmark Button


உயிரிலிடறும்.........  

Friday, December 4, 2009

நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!

உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து
சிலிர்த்ததென்சுயம்...

மீண்டும் மீண்டும்
இன்னும்
வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...

என்
அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....

காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...

நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...

ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..

உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........

இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....

AddThis Social Bookmark Button


சிலுவை  


நிலவில்
குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!
*
என்தேசத்தில்
தென்றல் நின்று விட்டது!

பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...

பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...
ஹைகூ பாடியஏரிக்கரை
நாணற்புதர்கள்....

எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!
*
காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...
*
முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...

உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....
என்கவிதை உயிர்தெழுகிறது!!!
copyrights@shameela

AddThis Social Bookmark Button


தொடுவானம்  

புழுதி படர்ந்த...
வானம்!
சோகம் சுமந்த...
காற்று!!!
வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!
தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!
ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....
சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!
வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!
உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....
இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!
ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf AliJuly 2007

AddThis Social Bookmark Button


 

Design by Amanda @ Blogger Buster