என்னை சுவாசிக்க விடுங்கள்!!!  

Saturday, December 5, 2009

என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக் கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.

என்னை
விட்டு விடுங்கள்....

அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.

நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.

நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னைசுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali

AddThis Social Bookmark Button


 

Design by Amanda @ Blogger Buster